வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளையும், மூடுமாறு, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
நாளை தொடக்கம், மறு அறிவித்தல் வரை, வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சந்தைகளையும், மூடுமாறும் அவர் இன்று அறிவுறுத்தியுள்ளார்.
“மருதனார்மடம் கொத்தணியின் தொடராக அனைத்துச் சந்தைகளின் வியாபாரிகளுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், அவற்றின் முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், அதுவரை ஆபத்தான சூழல் அபாயம் காணப்படுகிறது.
அதனால் வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பொதுச் சந்தைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அபாயக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் வியாபார சேவை, மற்றும் சமூக இடைவெளிகளுடன் பொது வெளியில் முன்னெடுக்கப்பட்ட வியாபார முறைகள் வெற்றி அளித்துள்ளதால் அந்த நடைமுறைகளைத் தொடருமாறு வியாபாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.