முல்லைத்தீவு மீனவர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம், இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவை படகுகளின் அத்துமீறிய செயல் காரணமாக தொடர்ச்சியாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தமது வாழ்வாதாரத் தொழிலை நிம்மதியாக செய்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருமாறும், கோரி முல்லைத்தீவு மீனவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம், காதர் மஸ்தான் ஆகியோர் நேரில் சென்ற பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளனர்.