யாழ்.மருதனார்மடம் கொரேனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் இவர்களுக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 11ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93 ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ்.மருதனார்மடம் பொதுச்சந்தையே வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட முதலாவது கொரோனா தொற்று நோய்க் கொத்தணி ஆகுமென அவர் குறிப்பிட்டார்.