2021ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம் என பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் ஆயத்தப் பணி தொடக்க விழாவில் பங்கேற்ற பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசும் போது, 70 ஆண்டுகளாக விவசாயிகளை கூன் போட்டு நிற்க வைத்தது காங்கிரஸ் ஆட்சிதான் என்றும், மத்திய அரசுடன் இணைந்து செயல்படாவிட்டால் இன்னும் 3 மாதத்தில் மேற்குவங்க அரசு அறுத்தெறியப்படும் என்றும் எச்சரித்தார். வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது என்ற கூறிய அண்ணாமலை, அரசியல் அடிப்படை புரிதல் இல்லாமல் பேசி வரும் ஸ்டாலின் தலைவராக இருக்கும் திமுக, வரும் தேர்தலில் காணாமல் போகும் என்று கூறினார்.