ரி.சி.சி. எனப்படும் ரொரன்ரோ போக்குவரத்து ஆணையத்தின், 302 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் 103 பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினு், 237 பணியாளர்கள் பணிக்குத் திரும்பியிருப்பதாகவும், ரி.சி.சி. தகவல் கூறுகிறது.
நொவம்பர் 23ஆம் திகதியில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம், 106 பணியாளர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அந்த தகவல் மேலும் கூறுகின்றது.