முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் மிக்கதாகக் காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனால், குறித்த தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வட மாகாண கொரோனா நிலைமை குறித்து இன்று யாழில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே வைத்தியர் கேதீஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.
புதுக்குயிருப்புப் பிரதேசத்தில் எழுமாற்றாக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் அப்பகுதியில் பல மக்களோடு தொடர்பில் இருந்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.