கேரள தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியின் முதல்வராக பதவியேற்றுள்ள 21 வயதான இளம்பெண் ஆர்யா ராஜேந்திரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.
இங்கு மார்க்சிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற 21 வயது கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன், மாநகர முதல்வராக இன்று பதவி ஏற்றார்.
கேரளாவில் 21 வயதில் முதல்வர் பதவிக்கு தேர்வான முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
இவருக்கு அரசியல் தலைவர்கள், பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.