அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் நாடுகடத்தலை எதிர்நோக்கியிருந்த வெளிநாட்டு கைதி ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
ஆண் கைதி உயிரிழந்துள்ளதாக சிட்னி குடிவரவுத் தடுப்பு முகாமில் உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய எல்லைப்படை உறுதிச் செய்திருக்கிறது.
நாடு கடத்தலில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவர் மிகுந்த கவலை அடைந்திருந்தார் என்று அவருடன் இருந்த மற்றொரு கைதி குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக, முகமது ஹபிஸ்யுதீன் ஜைனி என அறியப்படும் மலேசியாவைச் சேர்ந்த அக்கைதி கஞ்சா புகைத்தமைக்காகற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவரது ஆவணங்களை ஆராய்ந்த போது இவர் அவுஸ்திரேலியாவில் விசா காலம் முடிந்து தங்கியிருந்தது கண்டறியப்பட்டு குடிவரவுத் தடுப்புக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.
சுமார் 5 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் முதலில் அடிலெய்ட் (Adelaide) தடுப்பு முகாமிலும் பின்னர் சிட்னி குடிவரவுத் தடுப்பு முகாமிலும் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.