சீனாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்ப்பதாக, பீஜிங்கிற்கான தூதுவராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி பாலித கொஹான தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் சிறிலங்கா தூதரகத்தில் பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் உரையாற்றிய அவர், உள்ளூர் அதிகாரிகள், மற்றும் சீன சமூகத்தினருடன் துரிதமாக உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சீன வர்த்தக சமூகத்துடன் தொடர்புகளை வளர்ப்பது முக்கியமானது என்றும், இருதரப்பு உறவை வலுப்படுத்துவதும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான வரவேற்கத்தக்க இடமாக சிறிலங்காவை ஊக்குவிப்பதும், இருதரப்பு வர்த்தக தொடர்புகளை ஊக்குவிப்பதும், நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், தூதரகப் பணியாளர்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று உலகிலுள்ள மிகவும் இலாபகரமான சந்தை சீனா என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவின் பங்கு முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.