யாழ்.சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை 5.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னாரிலிருந்து – யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும் யாழில் சாவகச்சேரி பக்கம் வந்த ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில், ஹயஸ் வாகனத்தில் பயணித்த நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.