2021ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வினை நாளை ஆரம்பிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் 2021 ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வுகள் நாளை முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதன்படி, கடை, அலுவலக ஊழியர் திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட 4 திருத்தச் சட்டமூலங்கள் நாளைய தினம், விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், தண்டனை சட்டக் கோவையின் திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட 3 திருத்தச் சட்டமூலங்கள் நாளை மறுதினம் தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மேலும், புலமைச் சொத்து திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் விமான நிலைய வரி உள்ளிட்ட 10 கட்டளைகள் ஆகியன எதிர்வரும் 7 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.