தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், ஈ.பி.டி.பி.யும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, யாழ். மாநர முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்கவில்லை என்று, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட, இம்மானுவேல் ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்கும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறுஞ்செய்தி மூலம் ஆதரவு கோரியிருந்தார் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.