கியூபெக் மாகாணத்தில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதால் ஊரடங்கு உள்ளிட்ட புதிய விதிகளை அமுலாக்குவது தொடர்பில் மாகாண அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மற்றும் உற்பத்தி கைத்தொழில் துறை ஆகியவை உள்ளடங்கலாக அனைத்தையும் மேலும் சில காலங்களுக்கு மூடுதல் பொருத்தமானது என்று பொதுசுகாதார அதிகாரிகள் பரிந்துரைந்துரைத்துள்ளதாக ரேடியோ கனடா தெரிவித்துள்ளது.
மேலும், மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் அமுலாக்கப்பட்டுள்ள போதும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதானது, நடைமுறைரீதியில் காணப்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாகவும் ரேடியோ கனடாவிடத்தில் பொதுசுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.