சிறிலங்காவில் இன்று மட்டும் 535 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 47ஆயிரத்து 840ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இதுவரை 40 ஆயிரத்து 838 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதுடன் இன்னும், ஆறாயிரத்து 773 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்றினால் இதுவரை 229 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.