இந்தோனேசியாவில், வானூர்தி விபத்துக்குள்ளான கடல் பகுதியில் இருந்து, மனித உடல்களின் பாகங்கள் மற்றும் வானூர்தி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா வானூர்தி நிலையத்தில் இருந்து நேற்று 62 பேருடன் புறப்பட்டுச் சென்ற போயிங் வானூர்தி சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து வானூர்தி விழுந்த ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த மீட்பு பணியின்போது வானூர்தியின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இன்று மனித உடல்களின் பாகங்கள் மற்றும் உடைகளை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
இதனால், வானூர்தி ஜாவா கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது உறுதியாகியுள்ளது.