கிழக்கு சிரியாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் இராணுவ நிலைகள் மீதான இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் விளைவாக குறைந்தது ஐந்து வீரர்களும் 11 நட்பு போராளிகளும் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வகம் தெரிவித்துள்ளது
இஸ்ரேலிய விமானப்படை சிரியாவின் கிழக்கு நகரமான டெய்ர் அஸ் சோர் முதல் சிரிய,ஈராக் எல்லையில் உள்ள அல் புகாமால் பாலைவனம் வரை பல இடங்களில் 18 இக்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதல்களில் ஈரானிய புரட்சிகர காவலர்கள், லெபனான் ஹெஸ்பொல்லா மற்றும் ஈரானிய சார்பு ஆப்கானிய போராளிகள் அடங்கிய பட்மியோன் பிரிவுக்கு சொந்தமான ஐந்து சிரிய வீரர்கள் மற்றும் 11 நட்பு போராளிகள் கொல்லப்பட்டனர் என்று ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவர்களின் நாடுகள் மற்றும் ஒரு உறுதியான முடிவு உடனடியாக அறியப்படவில்லை. ஈரானிய சார்பு போராளிகளுக்கு சொந்தமான பல கிடங்குகள் மற்றும் தளங்கள் இப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிரிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.





