நாடுகடந்த திபெத்திய அரசாங்கத்தினதும், திபெத்திய நாடாளுமன்றத்தினதும் தேர்தலை சீர்குலைப்பதற்கு சீனா முயற்சி செய்வதாக திபெத்திய சமூகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் மேற்படி தேர்தல்களுக்கான வாக்கெடுப்பு சுமூகமாக நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் திபெத்திய சமூகத்தினர் வாக்களிப்பில் ஈடுபட்டபோது வாக்களிப்பு செயன்முறையையும் சில நாடுகளில் வாக்களித்தவர்களின் பெயர்களையும் சீனா அடையாளமிட முயன்றமைக்கான ஆதராங்கள் இருப்பதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
மேலும் பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள திபெத்தியர்களும் ஜனவரி மாதம் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.