பிரித்தானியாவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் கோர்ன்வோல் (Cornwall) பகுதியில் வரும் ஜூன் மாதம் ஜி-7 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.
வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் கொண்ட ஜி7 மாநாட்டில் விருந்தினராக கலந்து கொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது.
ஜி 7 மாநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று, பருவநிலை மாற்றம், திறந்த வர்த்தகம் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
அதேவேளை, ஜி-7 மாநாட்டிற்கு முன்னதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்தியாவிற்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.