திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றிய செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ். ஊடக அமையம், தெற்கு ஊடக அமையம் மற்றும் தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து ‘படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும்’ என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர்மலை அணிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, நினைவுரைகளும் இடம்பெற்றன.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ரீ. தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், யோகேஸ்வரன், அரியநேந்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன், மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.