இதுவரையில் முன்களப் பணியாளர்கள் வகையறைக்குள் உள்ளவர்களில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கையை மாகாண ரீதியாக கணக்கெடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்களப்பணியாளர்களின் சேவைகளை என்றுமே உயரிய இடத்தில் வைத்துபார்க்கப்பட வேண்டியது என்று சமஷ்டி அரசாங்கம் கூறியுள்ளது.
கனடாவுக்கு கொண்டுவரப்பட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்தும் செயற்பாட்டில் முன்களப்பணியாளர்களுக்கு கணிசமான முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.
எனினும் கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசியைச் செலுத்த முடியாத நிலைமையை உருவக்கியுள்ளது.





