ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக, விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்து, விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது அறிக்கையை இன்று முற்பகல், சிறிலங்கா ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
இந்த ஆணைக்குழு 15 மாதங்களாக, சாட்சி விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
சுமார் 450 பேரின் சாட்சியங்களை உள்ளடக்கிய இறுதி அறிக்கை ஆயிரம் பக்கங்களில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.