கடந்த வாரம் பதவிகளில் இருந்து விலகிய நான்கு முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி (Muhammadu Buhari ) வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளை வழங்கியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில் நைஜீரிய ஜனாதிபதி, இராணுவ கட்டமைப்புகளை மாற்றியமைத்திருந்தார்.
இதற்கமைய, கூட்டுப்படைகளின் தளபதி, இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தளபதிகளை பதவிகளில் இருந்து விலகுமாறு கோரி, அவர்களிடம் பதவி விலகல் கடிதங்களையும், நைஜீரிய இராணுவத் தளபதி பெற்றிருந்தார்.
இந்த நான்கு மூத்த இராணுவ அதிகாரிகளையும், வெளிநாட்டு இராஜதந்திரிகளாக நியமிப்பதற்கு அவர் செனட் சபைக்கு பரிந்துரைத்துள்ளார்.
முன்னாள் படைத் தளபதிகளின் இந்த நியமனங்களுக்கு பெரும்பாலும் செனட் சபையின் ஒப்புதல் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.