கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் ரஸ்யாவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான தேசிய பிரதிநிதியாக அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனம் தெரிவாகியுள்ளது.
கொரோனா தொற்று நோய் எதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் போது, அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊடாக மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தானத்தின் தலைவர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, உலகில் பாவணைக்கு வந்துள்ள 5 தடுப்பூசிகள் தொடர்பில் அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபன அவதானம் செலுத்தியுள்ளதுடன், ஒக்ஸ்போர்ட். செனகா. கொவிசீல்ட். தடுப்பூசியை முதன்மை பட்டியலின் கீழ் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.