உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 150 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் ரெய்னியில் உள்ள நந்தாதேவி பனிப்பாறை வெடித்ததால் தாவ்லி கங்கை ஆற்றில் திடீரென நீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது.
திடீர் வெள்ளப்பெருக்கால், அருகிலுள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன், வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
இந்த திடீர் வெள்ளத்தால் 150 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சீறி பாய்ந்த வெள்ளத்தினால், நீர் மின் திட்டத்திற்கான அணை சேதமடைந்துள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு 600 இராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.