அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றது என்று தமிழ்க் தேசியக் கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதன் வெளிப்பாடுதான் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட அனுமதி அளிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதியை நிராகரித்து தொற்று நோய் தடுப்பு இராஜாங்க அமைச்சரும் கொவிட் 19 கட்டுப்பாட்டு விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சருமான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எதிர் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது மட்டுமன்றி தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விடையம் பல தடவை அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டபோதும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகமோ பிரதமர் செயலகமோ உத்தியோகபூர்வமான அறிக்கையை வெளியிடவேண்டும். ஜனாசாக்கள் எரிக்கப்படுமானால் அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டுத் தன்மை உறுதிப்படுத்தப்படும்.
எவ்வாறானாலும் இத்தகைய விடையங்களில் ஒருமித்து செயற்படவேண்டும். இந்த விடயத்தில் குரல் கொடுக்கின்ற அத்தனை அமைப்புக்களும் நாடாளுமன்ற பிரதிநிதிகளும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
உடனடியாக ஜனாசா எரிப்பு திட்டத்தை கைவிடவேண்டும் இல்லை என்றால் முஸ்லிம் அனைத்துக் கட்சிகளும் தமிழ் கட்சிகளும் இணைந்து முஸ்லிம்களின் அனைத்து நாடுகளையும் கேட்கவேண்டும் எமது மத உரிமை மீறப்படுகின்றது இவற்றை சுட்டிக்காட்டி ஐ.நா.மனித உரிமையில் முறையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.