பிறந்து ஏழு வாரங்களேயான பச்சிளங் குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.
நுரையீரலில் ஏற்பட்ட நோய்நிலைமை காரணமாக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்ததுடன், பின்னர் பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
இதேவேளை, குழந்தையின் தாய்க்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
இந்நிலையில், கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது.