முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு,க தலைவர் மு.க ஸ்டாலின்மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரச்சாரம், வியூகம் என தீவிர கள பணிகளில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ஆம் திகதி தொடங்கியது.
அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பழனிசாமி இன்று பிற்பகலில் எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக ஸ்டாலின் கொளத்தூரில் தனது வேட்புமனுவை இன்று பிற்பகலில் தாக்கல் செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்இ கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் இன்றையதினம் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.