இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு இன்று இலேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதனை அடுத்து, அவர் உடனடியாக, டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ராம்நாத் கோவிந்த் நலமாக உள்ளதாகவும், சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் உடல்நிலை குறித்து அவரது மகனிடம், தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி விசாரித்ததாக இந்தியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.