பாகிஸ்தானில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரதமர் இம்ரான் கான், அமைச்சர்கள், அதிகாரிகளுடனான கூட்டத்தை, நடத்தியதற்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரதமர் இம்ரான்கான், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர், வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதுடன், அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்று பிரதமர் இம்ரான் கான், தனது இல்லத்தில் தகவல் ஒலிபரப்புத்துறையினருடன், நேரடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதில், அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஒளிப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சியினர், ‘கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை, பிரதமர் மீறியுள்ளது கண்டனத்திற்கு உரியது.’ என்றும், அவர் மீதும், கூட்டத்தில் பங்கேற்றோர் மீதும், வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ எனவும் கூறியுள்ளனர்.