உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு சிறிலங்கா முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என, சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு நிலைமை குறித்து பகுப்பாய்வு செய்யுமாறு சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அந்தப் பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், காவல்துறையினர் மேற்கொள்ளும் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறும் அந்தப் பகுதிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அடையாளம் காணப்பட்ட சிறப்புப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கவும் சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன கூறியுள்ளார்.