ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி , உள்ளிட்ட 250 அதிமுகவினர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மீண்டும் நடைபெற்றது.
ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், அதிமுகவின் வேண்டுகோளை ஏற்று காவல்துறையினர் அனுமதி அளிக்கப்பட்ட போதும், தொண்டர்கள் எவரும் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்த விதிமுறைகளை மீறி ஏராளமானோர் கூட்டமாக கூடியதால், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 250 பேர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.