அவுஸ்ரேலியாவில் பெய்து வரும் தொடர்ச்சியான கன மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கன மழை பெய்து வருகிறது.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் அந்தப் பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பல இடங்களில் அதிக அளவில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அதனால் குறித்த மாநிலத்தில் 16 பகுதிகள், பேரிடர் வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, அங்கு நாளை மறுதினம் வரை கடும் மழைபெய்யும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.





