பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் இடம்பெற்றுள்ள குண்டுவெடிப்பில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குவெட்டா நகரில் ஒரு வாக்குச் சாவடி அருகே மேற்கொள்ள்பபட்ட அந்த தற்கொலைத் தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அங்கு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குபதிவை ஒட்டி கிட்டத்தட்ட 3.5 இலட்சம் காவல்துறையினர், பாதுகாப்பு படையினர் ஆகியோர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்துடன் மேலும் சில இடங்களில் கட்சிகளின் ஆதவாளர்களிடையில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் இன்று நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடத்தப்படும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 85 ஆயிரம் இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிடுகின்ற போதிலும், இந்தத் தேர்தலில் முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், அவாமி தேசிய கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவுகள் மாலை 6 மணி முடிவடைந்ததும், இன்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டு நாளை முடிவுகள் அறிவிக்கப்படும்.