ரஷ்யாவில் எதிர்க்கட்சி மாநாட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர் உயர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட சுமார் 200 பேரை தடுத்து வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் விதிமுறைகள் மீறப்பட்டு, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அபராதம் அல்லது ஒரு குறுகிய காலம் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் மாதம் நடைபெறும் உள்ளூர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக அதிகாரிகள் தொடர்ந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.