அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோவை சிங்கப்பூரில் சந்திக்கும் எண்ணம் இல்லை என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நடக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் 51-வது கூட்டத்தில் ஈரான், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளதாக “சினுவா” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா – ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையே சந்திப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிப் மறுத்துள்ளார்.
அமெரிக்கா இந்தக் கூட்டத்தில் அவர்களது ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுன் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளதுடன்,ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.