உலகக்கோப்பையில் மோசமான தோல்வியால் அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்ப்பௌலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ரஷியாவில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நேற்றோடு முடிவடைந்தது. இதில் பிரான்ஸ் கோப்பையை வென்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று அர்ஜென்டினா. அந்த அணி லீக் சுற்றில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா மூலம் தட்டுத்தடுமாறி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
நாக்அவுட் சுற்றில் பிரான்ஸிடம் 3-4 என தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. அர்ஜென்டினா தோல்விக்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் சம்ப்ளொலி முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் அர்ஜென்டினா அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சம்ப்பௌலி விலகியுள்ளார்.