முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெறமுடியாது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்

734

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெறமுடியாது என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடனோ, சுதந்திர கட்சியுடனோ பயணித்து தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெறமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் ராஜபக்ஷவின் அரசியல் சூழ்ச்சியின் போது அதனைத் தோற்கடிக்க நாம் கூட்டமைப்போடு இணைந்து செயற்பட்டோம் ஆனால் இன்று மஹிந்தவின் திருடர்களையும் அவர்களின் திருட்டு செயல்களையும் ரணிலும், மைத்திரியும் இணைந்து பாதுகாக்கின்றனர் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதனால் ஒரு பொது வெளிக்கு நாட்டை கொண்டு செல்ல வேண்டியது அவசியம் எழுந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய வரவு செலவு திட்டத்தில் வடக்கை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எந்தவித நிதியையும் ஒதுக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *