முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சவூதி அரேபியாவுடன் நிலவி வரும் இராஜதந்திர முரண்பாட்டு நிலைமையினால் கனடா சுமார் ஏழு பில்லியன் டொலர் முதலீட்டை இழக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது

556

சவூதி அரேபியாவுடன் நிலவி வரும் இராஜதந்திர முரண்பாட்டு நிலைமையினால் கனடா சுமார் ஏழு பில்லியன் டொலர் முதலீட்டை இழக்கக்கூடிய அபாயம்  ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக சவூதி அரேபியாவுடன் இராஜதந்திர மற்றும் வர்த்தக ரீதியான முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த முறுகல் நிலைமைகளினால் பல பில்லியன் டொலர் நேரடி முதலீடுகளை இழக்க நேரிடும் என்று கனடிய மத்திய நிதி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் சவூதியில் கைது செய்யப்பட்டமை குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த டுவிட் பதிவினைத் தொடர்ந்து சவூதிக்கான கனேடிய ராஜதந்திரிகள் நாடு கடத்தப்பட்டுள்ளதுடன் முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றது.

இந்த ராஜந்திர முரண்பாட்டு நிலைமையானது இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் மற்றும் நேரடி முதலீடு ஆகியனவற்றை மோசமாக பாதிக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *