முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஜனநாயகத்தை ஏற்படுத்த ரணிலுக்கு ஆற்றல் இல்லை என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

579

நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சிக்குள் இல்லாத சனநாயகத்தை, நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஆற்றல் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

25 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகச் செயற்படும் ரணில் விக்ரமசிங்க, அதன் பின்வரிசை உறுப்பினர்கள் முன்னேற இடமளிக்கவில்லை என்பதுடன், நாட்டின் சட்டம், சனநாயகம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் அவர், முதலில் தனது கட்சிக்குள் சனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை எந்தவொரு காரணத்துக்காகவும் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரிச் சேவைகளும் தடைபடக் கூடாதெனவும் அவர் வலியுறுத்தினார்.

குறித்த நிதியாண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சகல நிதி ஒதுக்கீடுகளையும், உரியவாறு செலவிட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த அவர், எதிர்வரும் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களை உரியவாறு திட்டமிடவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் அமைதியின்மையை ஒரு பிரச்சினையாகக் கருதாது, பொதுமக்களுக்கான சேவைகளையும் அபிவிருத்திச் செயற்றிட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல, அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் நலன்கருதி தனது வழிகாட்டலில் சனாதிபதி செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சகல சிறப்பு கருத்திட்டங்களும், 2019ஆம் ஆண்டில் புதிய உத்வேகத்துடனும் வலுவுடனும் நடைமுறைப் படுத்தப்படுவதற்கான திட்டங்களைத் தயாரிக்குமாறும், சனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *