மாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சட்ட ரீதியான சிக்கல்களை நிவர்த்தி செய்தாலும் கூட ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மாகாணசபை தேர்தலை நடத்த முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அத்தோடு மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்த பின்னரும், அவற்றுக்குத் தேர்தலை நடத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறுகின்ற செயல் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய
Jan 15, 2019, 14:23 pm
493
Previous Postவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்
Next Postவடக்கில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை