முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 3 நக்சலைட்கள் கொல்லப்பட்டுள்ளனர்

694

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நேற்று நடந்த மோதலில் 3 நக்சலைட்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சுக்மா மாவட்டம், முலேர் என்ற கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்சலைட்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன் விளைவாக நேற்று முன் தினம் மாலையில் காவல்துறையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதுடன், இந்த மோதல் இடம் பெற்ற பகுதியில் இருந்து 3 நக்சலைட்களின் உடல்கள் மீட்கப் பட்டதுடன், ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *