முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தலீபான்களுடனான சமாதான பேச்சுக்கு உதவுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானிடம் கோரியுள்ளார்

557

தலீபான்களுடனான சமாதான பேச்சுக்கு உதவுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானிடம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான் கானிற்கு அமெரிக்க அதிபர் எழுதியுள்ள கடிதத்தில், ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், இதில் தமது இரண்டு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் பிராந்தியத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள இதற்கு பாகிஸ்தான் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தலீபான்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்றும், சமாதான பேச்சுக்கும் உதவி செய்யவேண்டும் எனவும் பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான் கானிற்கு அமெரிக்க அதிபர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கோரியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *