ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சாலையோரமாக வைக்கப்பட்ட குண்டு ஒன்றே வெடித்ததாகவும், அப்போது அந்த வழியே பயணித்துக்கொண்டீருந்த பேருந்து ஒன்று அதில் சிக்கி்க் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலை ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களே மேற்கொண்டனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ படைகள் கடந்த 2014-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறிய பின்னர் தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அங்கு கூடியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.