முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும்

203

இந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது அமைதியாக இருந்தாலும் அவர்கள் எமக்கு சாதகமாகவே தீர்மானமெடுப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியா எவ்வாறான நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் இப்போது தமிழகத்தில் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் அவர்களின் உள்ளக அரசியல் நகர்வுகள் காணப்படும் என்றார்.

யார் வலியுறுத்தினாலும் போர் குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையையும் நடத்த இடமளிக்க மாட்டோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை மீது நடத்தப்படும் வாக்கெடுப்பில் தோற்றாலும் கூட சர்வதேச நாடுகள் சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை வழங்கப்போவதில்லை எனவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *