அயோத்தியில் இராமர் கோவில் நிர்மாணிப்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 100 கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியாவில் இராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு ஆயிரத்து 100 கோடி ரூபா செலவாகும் என கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை கணக்கிட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 15 ஆம் திகதி முதல் பொதுமக்களிடம் நன்கொடை திரட்டும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் ஆயிரம் கோடி ரூபா அதிகமாக கிடைத்துள்ளது.
இராமர் கோயில் வளாக மொத்த கட்டுமானத்திற்கு ஆயிரத்து 100 கோடி ரூபாவும், அதில் கோவிலுக்கு மட்டும் 300 கோடி ரூபா முதல் 400 கோடி ரூபா வரையும் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.