முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

எங்கள் பிள்ளைகள் சாவதற்குள், அவர்களை மீட்ப்பதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

608

தங்கள் விடுதலைக்காக உணவு அருந்தாமல் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் பிள்ளைகள் சாவதற்குள், அவர்களை மீட்டு கொடுப்பதற்கு எல்லோரையும் ஒத்துழைப்பு தருமாறும், அவர்கள் எங்களுக்கு உயிரோடு வேண்டும் என்றும், அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடாத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அரசியல் கைதியான சுலக்ஷனின் சகோதரி மோகனா, தனது அண்ணா தற்போது ஐந்தாவது முறையாகவும் உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார் என்பதையும், ஒவ்வொரு முறையும் உணவுப் புறக்கணிப்புப்போராட்டத்தை முன்னெடுக்கும் போதும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அவை இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு ஐந்து முறை கடந்த நிலையிலேயே தற்போது இந்தப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள் எனவும், அவர்களது உடல் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது என்றும், எனவே அவர்களுக்கு விடுதலை அல்லது குறுகிய கால புணர்வாழ்வளித்து விடுதலை செய்யவேண்டும் எனவும், இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதியான கோமகன் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளுடைய வழக்குகளானது தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டு வருவதுடன், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எதுவித ஆதாரங்களும் இல்லை எனவும், வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தினை அடிப்படையாகக் கொண்டே வழக்குகளை தாக்குதல் செய்துள்ளார்கள் என்றும் விபரித்துள்ளார்.

இந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலமும் அவர்களால் சுயமாக வழங்கப்படவில்லை எனவும், மாறாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினுடைய வற்புறுத்தலின் அடிப்படையிலேயே அச்சத்தின் காரணமாக வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் தமது வழக்குகளை விசாரணை செய்வதற்காக சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டபோதும், தற்போது அங்கு அரசியல் கைதிகளின் வழக்குகள் விசாரிப்பதற்கு பதிலாக வேறு வழக்குகளே விசாரணை செய்யப்பட்டு வருவதுடன், மீண்டும் அரசியல் கைதிகளின் வழக்குகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளன எனவும், அத்துடன் தமது வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகளும் தம்முடைய சார்பாக முன்னிலையாவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலத் தவணைகளும் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றன எனவும், இந்த நிலையிலேயே அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அந்த அரசியல் கைதிகளே கடந்த ஐந்து தடவைகள் உணவுப் புறக்கணிப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும் அந்த ஐந்து தடவைகளும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளும் மீண்டும் உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள் எனவும், இவ்வாறான நிலையில் அந்த அரசியல் கைதிகளின் விடுதலையை முதன்மைப்படுத்தி, அதற்கான ஆக்கபூர்வமான தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு யாழ். பல்கலைக்கழக சமூகம், தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியோர் முன்வரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *