முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலருடன் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு

1037

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பென்ட்மனை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, அரசியலமைப்பு மாற்றம், நல்லிணக்க முயற்சிகள், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் காணப்படும் மெத்தனப் போக்கு மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *