முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஐ.நா.தீர்மானத்திற்கு எதிர் நடவடிக்கைகளை முன்னெக்க சிறிலங்கா தீவிரம்

230

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கூட்டத்தொடரில், மேற்குலக நாடுகளால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவதற்கு, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக, கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு சிறிலங்கா அரசாங்க உயர்மட்ட வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிராக பயணத் தடை, சொத்துக்களை முடக்குதலை உள்ளடக்கிய தீர்மானத்தை  ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்க, அனுசரணை நாடுகள் தயாராகி வருகின்றன.

இந்தநிலையில், 47 நாடுகளைக் கொண்ட ஐநா மனித உரிமைகள் பேரவையில், இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா அரசாங்க உயர்மட்ட வட்டாரம், தெரிவித்துள்ளது.

முதலில் இந்தியாவை அணுகியுள்ளதாகவும், சிறிலங்காவின் இந்த வேண்டுகோளை பரிசீலிப்பதாக இந்தியா பதிலளித்துள்ளதாகவும், அரசாங்க வட்டாரம் மேலும் கூறியுள்ளது.

சீனாவும், ரஷ்யாவும், ஏற்கனவே சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளிலும், இறங்கியுள்ளதாக, இந்திய ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *