முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முறைசாரா கலந்துரையாடல்கள்

227

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முறைசாரா கலந்துரையாடல்கள் இன்று ஆரம்பமாகியுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், பிரித்தானியா தலைமையிலான ஆறு அனுசரணை நாடுகளால், சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான தீர்மான வரைவு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தேடும் வகையிலான, முறைசாரா கலந்துரையாடல்கள் இன்று தொடக்கம் நடைபெற்று வருகின்றன.

எதிர்வரும் 10ஆம் நாள் வரை இந்த கலந்துரையாடல்கள் தொடர்ந்து இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நடத்தப்பட்ட விவாதத்தில் உரையாற்றிய 21 நாடுகளின் பிரதிநிதிகளில் ஒன்பது அல்லது 10 நாடுகளின் பிரதிநிதிகளுக்கே வாக்களிக்கும் உரிமை உள்ளதாக கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *