இந்தியாவில் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை முன்களப் பணியாளர்களுக்குப் போடும் நடவடிக்கை கடந்த 16ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில், இதுவரையில் 10 இலட்சத்து 43 ஆயிரத்து 534 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இன்று கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.